மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாம் உடல் கெட்டு விடக்கூடாது என்பதற்காக முறைப்படி பதப்படுத்தப்பட்டுள்ளது என்று மலேசிய துணை பிரதமர் அகமது ஜாகித் ஹமிதி அறிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. பல முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
நாகப்பட்டினம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.
கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சருக்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கும் அவசரமாக உத்தரவிட்டுள்ளார்.