திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த ஊழியர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரான சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவர், பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தும் எந்தவொரு பரீட்சைகளிலும் தோற்ற முடியாத படி, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொண்டைப் புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் மனைவிக்கு அறுவை சிகிச்சை வெற்றி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முகுருஜா, ஷரபோவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் முன்னணி வீரர் சிலிக் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
மாணவி அணிதாவின் தற்கொலை பெரும் வேதனை அளிக்கிறது எனவும் எதிர்காலத்தில் எந்த தேர்வு வந்தாலும் அதை சந்திப்பதற்கு மாணவர்களை தயார்படுத்துவோம் எனவும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.