தீவிரவாதம், போதைப்பொருள் வர்த்தகம் போன்றவற்றை ஆரம்பித்து அதனை வளர்த்தவர்கள் மற்றும் கொலை, பாலியல் வன்புணர்வு, சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றுடன் தொடர்புடைய எவரையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதியான பின்னர் நான் நடவடிக்கை எடுக்கமாட்டேன். ஒவ்வொருவரும் பல்வேறு விதமான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கலாம். எனினும் எனது…
ரோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் மூன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் இறுதி பிரச்சார கூட்டங்களும் , கொழும்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ளன.
முத்தரிப்புத்துறை கடலில் பழுதடைந்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்த முற்பட்ட இளம் குடும்பஸ்தர் இயந்திரத்தின் கூறிய கம்பி கழுத்தில் குத்தி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்குப்படையான் கிராமத்தைச் சேர்ந்த…
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி முறிப்பு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இராசரத்தினம் சந்திரகுமார் என்ற குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.…
ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களே கைது செய்யப்பட்டிருப்பவர்களாவர்.