யாழில் இந்தியப் பிரஜைகள் இருவர் கைது

2815 0

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இருவர், ஊர்காவற்துறை – துறையூர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

38 வயதான பெண் மற்றும் 28 ஆண் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளதோடு, இவர்கள் இந்தியப் பிரஜைகள் எனவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் வீசா நடைமுறையை மீறி ஆடை விற்பனையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment