விஜய் மல்யா லண்டனில் கைதாகி பிணையில் விடுவிப்பு

340 0

இந்தியாவில் பாரிய நிதி ஏய்ப்பை மேற்கொண்டு, லண்டனிற்கு தப்பிச் சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்யா, லண்டனில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பணச்சலவை குற்றத்துக்காக அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்களை கடன்பெற்று, அதனை திரும்பச் செலுத்தாமல், விஜய் மல்யா தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

அவருக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் பணச்சலவை சட்டத்தின் கீழ் இந்திய அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளின் அப்படையில் அவர் லண்டன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் அவர் கைதாகி, பிணையில் விடுவிக்கப்படும் இரண்டாம் சந்தர்ப்பம் இதுவாகும்.

Leave a comment