இந்திய மீனவர்கள் 8 பேர் யாழ்ப்பாண கடற்பரப்பில் கைது(காணொளி)

11776 0

இந்திய மீனவர்கள் 8 பேர் யாழ்ப்பாண கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டிணத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 8 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களிடமும் காங்கேசன்துறையில் வைத்து விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடற்படையினர் இந்திய மீனவர்களை யாழ்ப்பாண நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Leave a comment