வவுனியாவில் விபத்து! இருவர் படுகாயம்

396 0

வவுனியா – முண்டிமுறிப்பு பிரதேசத்தில் இன்று காலை வேன் ஒன்று, பாரவூர்தியில் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பிய தரப்பினரை கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏற்றிச் சென்ற வேனொன்று, டயரை மாற்றுவதற்காக வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் வேனில் வந்தவர்கள் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a comment