இந்தோனேசியாவில் படகு விபத்து – 10 பேர் பலி 

15828 0

இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் வேகமாக சென்ற ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து இடம்பெற்ற போது அந்தப் படகில் 40 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தை அடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.

இந்தோனேசியா – மலேசியா இடையேயான நீர் வழிப்போக்குவரத்தில் அடிக்கடி படகு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடற்பாறையில் மோதி ஒரு படகு விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பலியானமை நினைவுகூரத்தக்கது.