அமைச்சர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்.

317 0

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றைய தினம் பிணை முறிதொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தொடர்பான கலந்துறையாடல் ஒன்றில் இன்றைய தினம் கலந்து கொள்ள உள்ளதன் பொருட்டு இன்றைய தினம் தம்மால் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று முன்னிலையாவார் என தெரிவிக்கப்பட்டது.

பிணைமுறி தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட காலப்பகுதியில் நிதியமைச்சராக இருந்த நிலையில் அவரிடம் ஆணைக்குழு விசாரணை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்க

Leave a comment