போரினால் பாதிக்கப்பட்டு வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உதவித்திட்டம்

1105 0

கடந்த வருடம் கார்த்திகை, மார்கழி மாதங்களில், தமிழீழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியினரால் பெறப்பட்ட ஆடைகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஊடாக போரினால் பாதிக்கப்பட்டு வறிய நிலையில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மெனிக்பாம் பிரிவு – 1, மெனிக்பாம் பிரிவு – 2, மெனிக்பாம் பிரிவு – 3 மற்றும் கங்கன்குளம் ஆகிய கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 67 பயனாளிகளுக்கு மேற்படி ஆடைகள் வழங்கப்பட்டது.

இவ் உதவித் திட்டத்தில் பங்களிப்பு செய்த அனைத்து உறவுகளிற்கும் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.

Leave a comment