கறிற்றாஸ் வாழ்வுதய பணியகத்தின் உதவிக்கரம் பிரிவின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

291 0

மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றி வரும் கறிற்றாஸ் வாழ்வுதய பணியகத்தின் உதவிக்கரம் பிரிவின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இடம் பெறவுள்ளது.

குறித்த திட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம. ஜெயபாலன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மன்னார் வயல் வீதியில் அமைந்துள்ள ‘உதவிக்கரம்’ நிலையத்தில் இந்த இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.

எனவே இரத்த தானம் செய்ய விரும்பும் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment