வடக்கு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து நல்லூரிலிருந்து போராட்டம்

228 0
வடக்கு முதல்வருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையினரால் கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்ற  நிலையில் இன்றைய தினம் நல்லூர் ஆலயத்திற்கு முன்னால் முதல்வருக்கு ஆதரவாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது .
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்குபற்றிய இந்த எதிர்ப்பு போராட்டம் நடைபவனியாக சென்று முதல்வரின் வாசஸ்தலம் வரை இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கூட்டமைப்பின் உறுப்பினர்களான மாவை சுமந்திரன் சம்பந்தன் மற்றும் அவைத்தலைவர் சி வி கே சிவஞானம் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

Leave a comment