அமெரிக்கா தாக்கினால்… பலஸ்டிக் ஏவுகணைவுடன் காத்திருக்கும் ஈரான்

16 0

ஈரானுடன் அமெரிக்கா எந்த நேரமும் போர் புரியலாம் என்ற பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நிலையில், அப்படி அமெரிக்கா தங்களுடன் போர் புரிந்தால் தங்களின் பலஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் ஈரானும் உள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அவர்களது முதன்மையான இலக்கு எதுவாக இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஆனால் அமெரிக்கா இவ்வாறான ஒரு தாக்குதலை மேற்கொள்ளுமா என்ற கேள்வியும் உள்ளது.

அமெரிக்கா புலனாய்வுபிரிவுகள் சதி நடவடிக்கைகளில் ஈடுபடலாம் மற்றும் பாரிய அளவிலான சைபர் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அப்படி ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் 3 தெரிவுகள் இருக்கும் என்கிறார்கள் முன்னாள் இராணுவ அதிகாரிகள்.