நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கான நிலஎடுப்பு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் நூற்றாண்டு கால கனவுத் திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தில் சாத்தனூர் அணையின் உபரி நீரை 23 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊட்டுக்கால்வாய் மூலம் நந்தன் கால்வாயுடன் இணைக்க, நில எடுப்பு பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் அதற்கான செலவிட்டுத்தொகை ரூ.42,69,51,310-க்கு கடந்த 29-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

