கேகாலை – அத்தனகொட வீதியில் நேற்று புதன்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த இளைஞன் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

