“கட்சிகள் அணி மாறுவது, மாற்றிப் பேசுவது ஜனநாயகத்தில் நடப்பது தான்” என கூட்டணி குறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை வந்தார். அப்போது, அவர் தமிழ்நாடு ஹோட்டலில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எஃகு கோட்டை போன்று உறுதியாகவும், பலமாகவும் உள்ளது.
திமுக மாநாடுகளை நடத்தி தேர்தல் பந்தயத்தில் எங்கள் அணி மிகுந்த முன்னோட்டத்தோடு அனைவரையும் முந்திக்கொண்டு நிற்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான அணி மிகப் பெரும்பான்மையான வெற்றியை பெறும். தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சி 2026- ம் ஆண்டுக்கு பிறகும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

