உலகத்தை செழிப்பாக மாற்றும் இந்தியா: ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா நெகிழ்ச்சி

10 0

வெற்​றிகர​மான இந்​தியா உலகை அதிக நிலைத்தன்மை கொண்​ட​தாக​வும் செழிப்​பான​தாக​வும் மாற்றுகிறது என ஐரோப்​பிய ஆணைய தலை​வர் உர்​சுலா வான்டெர் லேயன் தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யில் ஆண்​டு​தோறும் ஜன.26ம் தேதி நடை​பெறும் இந்​திய குடியரசு தின விழா​வில் தலைமை விருந்​தின​ராக பங்​கேற்க வெளி​நாட்​டுத் தலை​வர்​களுக்கு அழைப்பு விடுப்​பது வழக்​கம். அந்த வகை​யில் மத்​திய அரசின் அழைப்பை ஏற்று நாட்​டின் 77-வது குடியரசு தின விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, ஐரோப்​பிய ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வான்டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலை​வர் அந்​தோனியோ கோஸ்டா ஆகிய இரு​வரும் 3 நாள் பயண​மாக டெல்லி வந்​துள்​ளனர். அவர்​கள் இரு​வரும் டெல்லி​யில் நேற்று நடை​பெற்ற குடியரசு தின​ விழா​வில் தலைமை விருந்​தின​ராக பங்​கேற்​றனர்.

இந்​தியாவுக்கும் 27 நாடு​களை உறுப்​பின​ராகக் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்த பேச்​சு​வார்த்தை கடந்த 2007-ம் ஆண்டு தொடங்​கியது. எனினும் 2013-ல் பேச்சுவார்த்தை தடைபட்டது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த ஒப்​பந்​தம் இப்போது இறுதிக் கட்​டத்தை எட்​டி​யுள்​ளது.

இந்​நிலை​யில், ஐரோப்​பிய யூனியன், இந்​தியா உச்சி மாநாடு இன்று டெல்​லி​யில் நடை​பெற உள்​ளது. இதில் உர்​சுலா வான் டெர்லேயன், பிரதமர் மோடி உள்​ளிட்​டோர் பங்​கேற்க உள்​ளனர். இதில் இருதரப்​புக்​கும் இடையி​லான வரலாற்று சிறப்பு மிக்க தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என எதிர்பார்க்கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், எக்ஸ் தளத்​தில் உர்​சுலா வெளி​யிட்ட பதி​வில், “இந்திய குடியரசு தின விழா​வில் பங்​கேற்​றது என் வாழ்​நாளில் கிடைத்த கவுர​வம். வெற்றி நடை​போடும் இந்​தி​யா, உலகை அதிக நிலைத்​தன்மை கொண்​ட​தாக​வும், வளமான​தாக​வும், பாதுகாப்பான​தாக​வும் மாற்​றுகிறது. இதன் மூலம் நாம் அனைவரும் பயனடைவோம்” என்று புகழாரம் சூட்​டி​யுள்​ளார்.

இந்​தியா வரு​வதற்கு முன்பு வான் டெர் லேயன் கூறும்​போது, “இந்தி​யா​வும் ஐரோப்​பிய யூனியனும் ஒரு வரலாற்​றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்​பந்​தத்​தின் விளிம்​பில் உள்​ளன. இந்த ஒப்பந்​தம் 200 கோடி மக்​களைக் கொண்ட ஒரு மாபெரும் சந்தையை உரு​வாக்​கும். இது உலகளா​விய மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் கிட்​டத்​தட்ட நான்​கில் ஒரு பங்​கைக் கொண்டிருக்கும்” என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

ஐரோப்​பிய யூனியன் இந்​தி​யா​வின் மிகப்​பெரிய வர்த்தக கூட்டாளி ஆகும். கடந்த 2023- 24 நிதி​யாண்​டில் இரு தரப்பு வர்த்தகம் 135 பில்​லியன் டால​ராக இருந்​தது. இதை இரு மடங்​காக அதி​கரிக்​க இலக்​கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்கள் விலை குறையும்: வெளி​நாட்டு கார்​களுக்கு தற்​போது 70 முதல் 110 சதவீதம் வரை வரி விதிக்​கப்​படு​கிறது. தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் அமலா​னால் இறக்​குமதி வரியை 40% குறைக்க இந்​தியா திட்​ட​மிட்​டுள்​ளது. இதன் மூலம் பிஎம்​டபிள்​யூ, மெர்​சிடஸ் பென்​ஸ், வோக்​ஸ்​வேகன், ரெனால்ட் போன்ற ஐரோப்​பிய நிறு​வனங்​களின் கார்​ விலை குறையும்.

எனினும், இதில் மின்​சார வாக​னங்​கள் முதல் 5 ஆண்​டு​களுக்கு சேர்க்​கப்​ப​டாது. டாடா மோட்​டார், மகிந்​திரா போன்ற உள்​நாட்டு நிறு​வனங்​கள் மின்​சார கார் திட்​டத்​தில் அதி​கம் முதலீடு செய்துள்ளன. இது பாதிப்​படை​யும் என்​ப​தால் 5 ஆண்​டு​களுக்கு பின்பு வெளி​நாட்டு மின்​சார கார்​களுக்​கும் வரி குறைக்​கப்​படும். இந்​தி​யா​வில் ஆண்​டுக்கு 44 லட்​சம் கார்​கள் விற்பனையாகின்றன. இதில் வெளி​நாட்டு கார்​களின் பங்கு 4 சதவீதத்​துக்​கும் குறை​வாக உள்​ளது குறிப்பிடத்தக்கது.