நாடளாவிய ரீதியில் 524 பேர் கைது

9 0

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சேதனை நடவடிக்கைகளின் மூலம் நேற்று (24) சந்தேகத்தின் பேரில் 524 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் நேரடி தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 256 பேரும், பகிரங்க பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்த 200 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 429 சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், கவனயீனமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 53 பேரும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,706 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.