காங்கிரஸ் கட்சி வரும் சட்டப்பேரவை தேர்தலில் பல பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும் என்று அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தெரிவித்தார்.
இது குறித்து அவர் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நாம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். இந்த 5 மாநிலங்களுக்கும் தற்போது பிரதமர் வருகை தந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார். பிரதமர் மோடிக்கு பெண் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பில் எந்தவித கவலையும் இல்லை. அவரது ஆட்சியில் பாலியல் தொல்லை, போக்சோ உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சரியான முறையில் விசாரணை நடப்பதில்லை, குற்றவாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் கிடைப்பதில்லை.

