கிளிநொச்சி வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கடல் அட்டைகளுடன் 13 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையினர் திங்கட்கிழமை (19) அதிகாலை கிளிநொச்சி வடக்கு, வலைப்பாடு கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இரவு நேரத்தில் சட்டவிரோதமாக சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்களையும், 1108 கடல் அட்டைகளுடன், நான்கு டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் புவனேக, கிளிநொச்சி, வலைப்பாடு கடல் பகுதியில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நான்கு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் சோதனை செய்யப்பட்டன.
அந்த நேரத்தில், சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 13 நபர்கள், சுமார் 1108 கடல் அட்டைகள், நான்கு டிங்கிகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 முதல் 67 வயதுக்குட்பட்ட கிளிநொச்சி, பள்ளிமுனை, தொட்டவேளி, சவுத்பார் மற்றும் எழுத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி உதவி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

