உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று (ஜன.17) வாடிவாசலில் சீறிப் பாய்ந்தபோது அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் தூக்கி வீசி பந்தாடிய காளைகள், திமிலை சிலிர்த்து தீரம் காட்டிய காளைகளை தீரத்துடன் அடக்கிய காளையர் என பார்வையாளர்களை மெய்சிலிக்க வைத்தது. புகைப்படத் தொகுப்பு இங்கே…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000+ காளைகளுடன் 900 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து லாவகமாக அடக்கினர்.

சில காளைகள் வீரர்களை பக்கத்தில் நெருங்க விடாமல் பாய்ந்து சென்றன. முரட்டுக் காளைகளை வீரர்களை தூக்கி வீசி பந்தாடின.


