அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி கிழக்கில் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

12 0

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிர்வாக சீர்கேடு இடம் பெற்றுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனவே வைத்திய பணிப்பாளரை உடன் இடமாற்றக் கோரி மனித உரிமை அமைப்புக்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் அடிதடி கலாசாரத்தை உடன் நிறுத்துமாறும் வைத்திய பணிப்பாளரை உடன் வெளியேற்றி, நோயாளிகளின் உயிரோடு விளையாடும் வைத்தியரை, அதிகாரத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதிக்கு அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று, வைத்தியசாலையில் இடம்பெற்ற சீர்கேடுகள் தொடர்பான மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (14) காலை தொடக்கம் மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் அம்பாறை ஆகிய மாட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலுள்ள வைத்தியர்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தும் எல்லா வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதன் காரணமாக மக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

கிளினிக்குக்காக வருகை தந்த மக்கள் வைத்திய சேவைகளைப் பெற முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இளைஞர்களால் கடத்தி வரப்பட்ட புறாக்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.