தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி வாழ் வூப்பெற்றால், சீகன், வெல்பேர்ட் ,என்னப்பெற்றால் தமிழ்மக்கள்.

83 0

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 30/12/2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பிரதேசத்தில் உள்ள ரெட்பானா வள்ளுவர்புரம் கிராமத்தில் உள்ள 30 குடுத்தினருக்கும் உடையார்கட்டு பிரதேசத்தில் உள்ள இருட்டுமடு கிராமத்தில் உள்ள 40 குடும்பத்தினருக்கும் யேர்மனி நாட்டில் உள்ள வூப்பெற்றால், சீகன், வெல்பேர்ட்,மற்றும் என்னப்பெற்றால் ஆகிய நகரங்களில் வாழும் தமிழ் உறவுகளின் நிதியாதரவில் அரிசி, மா, கடலை, சோயா, சீனி, தேயிலை, சவர்க்காரம் என்பன உள்ளடங்கிய உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இப்பேருதவியை வழங்கிய யேர்மனி வூப்பெற்றால், சீகன், வெல்பேர்ட், என்னப்பெற்றால் ஆகிய நகரவாழ் தமிழ் உறவுகளுக்கு விசுவமடு மற்றும் உடையார்கட்டு பிரதேச மக்கள் தங்கள் உளம்கனிந்த நன்றியினைத் தெரிவித்தனர்.