சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்தி: ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அறிவிப்பு

5 0

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் துரித இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அந்தப் பதிவில் ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டதாக கூறி சில தொலைபேசி எண்களும் நேரடித் தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், இவை அனைத்தும் மோசடியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

எனவே சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தப்படாத இவ்வாறான பதிவுகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி செயலகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்க நடைமுறைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட செய்தி ஆதாரங்களை மட்டுமே நம்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.