அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வானது செல்லாது என நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார் பெங்களூரு வா.புகழேந்தி. அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களையும் ஏற்கக் கூடாது என ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருக்கும் அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
Q
பழனிசாமிக்கு எதிராக நீங்கள் போடும் மனுக்களை எல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாத போதும் எந்த நம்பிக்கையில் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறீர்கள்?
A
எனது மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை முன்வைத்து நான் தொடுத்த அவமதிப்பு வழக்கை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர் களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். ஜனவரியில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எனது கடும் உழைப்பு வீண் போகவில்லை.

