36 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன – நீர் முகாமைத்துவப் பணிப்பாளர்

12 0

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

மாவட்ட ரீதியாக வான் பாயும் நீர்த்தேக்கங்களின் விபரம் பின்வருமாறு:

அநுராதபுரம்: அனைத்துப் பிரதான நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன. 

அம்பாறை: 9 இல் 3 நீர்த்தேக்கங்கள். 

பதுளை: 7 இல் 3 நீர்த்தேக்கங்கள். 

மட்டக்களப்பு: 4 இல் 3 நீர்த்தேக்கங்கள். 

ஹம்பாந்தோட்டை: 10 இல் 4 நீர்த்தேக்கங்கள். 

கண்டி: 3 இல் 2 நீர்த்தேக்கங்கள். 

குருநாகல்: 10 இல் 4 நீர்த்தேக்கங்கள். 

மொனராகலை: 3 இல் 1 நீர்த்தேக்கம். 

பொலன்னறுவை: 4 இல் 2 நீர்த்தேக்கங்கள். 

திருகோணமலை: 5 இல் 3 நீர்த்தேக்கங்கள். 

மன்னார்: 4 இல் 1 நீர்த்தேக்கம். 

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறப்பதன் மூலம் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தபட்ச மட்டத்திலேயே காணப்படுவதாகப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.