இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு 10/12/2025 மட்டக்களப்பு மாவட்டம் தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மகிழடுத்தீவு கிராமத்தைச் சேர்ந்த, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கியிருந்து, வீட்டிற்கு மீளச்சென்ற தொழில் வாய்ப்பில்லாத 50 குடும்பங்களிற்கு இத்தாலி பலெர்மோ வாழ் தாயக உறவுகளால் உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அரிசி, கோதுமைமா, சீனி, தேயிலை, பருப்பு, சோயா போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.இவ்வுதவித்திட்டத்தில் பயன்பெற்ற மட்டக்களப்பு மக்கள், இத்தாலி-பலர்மோ வாழ் தமிழ்மக்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தனர்.











