தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-யேர்மனி கன்னோவர் தமிழாலயம்

145 0

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-யேர்மனி கன்னோவர் தமிழாலயம்
திருகோணமலை மாவட்டம்

இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 11/12/2025 திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசபைக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்ற 70 குடும்பங்களுக்கு யேர்மனி கனோவர் தமிழாலயம் 35வது ஆண்டு நிறைவையொட்டி தாயக உறவுகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அரிசி கோதுமைமா,சீனி, தேயிலை,பருப்பு, சோயா போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.பயன்பெற்ற மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.