உதவிப் பொருட்களுடன் ரஷ்ய விமானம் வந்திறங்கியது

16 0

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைக்கு ரஷ்ய,  ஒரு சிறப்பு சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை புதன்கிழமை (10) மதியம் அனுப்பியது.

விமானத்தில் ஒரு நடமாடும் மின் நிலையம், தாவர எண்ணெய், சர்க்கரை, அரிசி மற்றும் கூடாரங்கள் இருந்தன.

இவற்றை ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய ரஷ்ய சரக்கு விமானமான இலியுஷின் IL-76,  கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை (10) அன்று 01.10 மணிக்கு வந்தடைந்தது.

இந்த சந்தர்ப்பத்தில், இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் லெவன் ஜார்ஜியன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் லிமிடெட்டின் தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம  கலந்து கொண்டனர்.