தூய்மைப்பணி தனியார்மயத்தை எதிர்த்து உண்ணாவிரதம்

34 0

 தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வதை எதிர்த்​து, கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டத்​தில் ஈடு​பட்டு வரும் 4 தூய்​மைப் பணி​யாளர்​களின் உடல்​நிலை குறித்​து, தின​மும் காவல் நிலை​யத்​துக்கு அறிக்கை அளிக்க, உழைப்​போர் உரிமை இயக்​கத்​துக்​கு, சென்னை உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை மாநக​ராட்​சி​யின், 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வதை எதிர்த்​து, தூய்​மைப் பணி​யாளர்​களான பார​தி, கீதா, ஜெனோவா மற்​றும் வசந்தி ஆகிய 4 பேர் அம்​பத்​தூரில் உள்ள உழைப்​போர் உரிமை இயக்க அலு​வல​கத்​தில் தொடர் உண்​ணா​விரத போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

உயர்​நீ​தி​மன்ற உத்​தர​வின்​படி, போராட்​டத்​தில் ஈடு​படும் 4 பேரின் உடல்​நிலையை பரிசோ​தித்த ஆவடி அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர், அவர்​களின் உடல் நிலை மோசமடைந்​துள்​ள​தாக அறிக்கை அளித்​திருந்​தார்.

இந்த அறிக்​கை, நீதிபதி ஜெகதீஷ் சந்​திரா முன் தாக்​கல் செய்த காவல் துறை தரப்பு கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் முகிலன், “அவர்​களை கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு அனு​ம​திக்க வேண்​டும்.

அவர்​களுக்​குப் பதிலாக வேறு 4 நபர்​கள் உண்ணாவிரதத்தை தொடர அனு​ம​திக்​கலாம்” என கேட்டுக் கொண்​டார். ஆனால், 4 பேரின் உடல் நிலை இயல்​பாக உள்​ள​தாக உழைப்​போர் உரிமை இயக்​கம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, தனி​யார் மருத்​து​வ​மனை மருத்​து​வர் மூலம் 4 பேரின் உடல் நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உழைப்​போர் உரிமை இயக்​கத்​துக்கு நீதிபதி உத்​தர​விட்​டிருந்​தார். அதன்​படி, உழைப்​போர் உரிமை இயக்​கம் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட தனி​யார் மருத்​து​வரின் அறிக்​கை​யில், 4 பேரும் நல்ல உடல்​நிலை​யில் இருப்​பதாக தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதையடுத்​து, 4 பேரின் உடல் நிலை குறித்து தின​மும் மாலை 7 மணிக்கு அம்​பத்​தூர் போலீ​ஸாருக்கு அறிக்கை அளிக்​கும்​படி, உழைப்​போர் உரிமை இயக்​கத்​துக்கு நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.