யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது!

23 0

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 5 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தியதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்து வருகின்றனர்.