சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும்

37 0

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (19) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு லயன் கழகத்தின் அனுசரணையுடனும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை ஊர்வலம் சென்றது.

அவ்வேளை நீரிழிவு நோயின் தாக்கம், அதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பான துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

இந்த ஊர்வலம் காந்தி பூங்காவைச் சென்றடைந்ததும் அங்கு நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் திணைக்களத்தின் தொற்றா நோய் பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ருதேசன், மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார், லயன்ஸ் கழக மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.லோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நடத்தப்பட்ட நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனையிலும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.