இந்திய துணைத் தூதுவர் – மஹிந்த ராஜபக்ஷ இடையில் சந்திப்பு

30 0

இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்திய துணைத் தூதுவர்  ஸ்ரீ ஹர்விந்தர் சிங் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளுக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சார்பில் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியிருந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை – தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.