காத்தான்குடியில் இளைஞன் கைது!

49 0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலாம் குறிச்சி  பிரதேசத்தில் 10 கிராம் 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸார்  வெள்ளிக்கிழமை (10) நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது முதலாம் குறிச்சி அல் அக்ஸா ஒழுங்கையில் வைத்து சந்தேக நபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 10.150 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தார்.

இந்த சம்பவம்  தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.