சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர், செட்டிகுளம் பொலிஸாரினால், வெள்ளிக்கிழமை(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாங்குளம் பகுதியில், செட்டிகுளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 25 கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட 40 பொதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
இதன்போது, சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 21, 28, 40 மற்றும் 43 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.


