சுவிட்சர்லாந்தில் தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிசாருக்கு நேர்ந்த துயரம்

44 0

சுவிட்சர்லாந்தில் அணை ஒன்றிற்குள் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிஸ் துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தண்ணீரில் விழுந்த நபர்

ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 மணியளவில், சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில், Limmat நதியில், Dietikon மின் நிலையத்தின் முன்னால் ஒருவர் தண்ணீரில் தத்தளிப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

அவர்கள் அங்கு விரைந்தபோது அந்த நபரைக் காணாததால் படகுகள், ஹெலிகொப்டர்கள் மூலம் அவரைத் தேடத்துவங்கியுள்ளார்கள்.

அவரைக் கண்டுபிடிக்கமுடியாததால், அவரை தண்ணீருக்குள் இறங்கித் தேடுவதற்காக பொலிஸ் துறையைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர் நதியில் இறங்கியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிசாருக்கு நேர்ந்த துயரம் | Swiss Cop Diver Dies In Limmat Rescue Operation

ஆனால், அந்த 44 வயது ஆழ்கடல் நீச்சல் வீரர், விபத்தொன்றில் படுகாயமடைந்து உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

அது என்ன விபத்து என தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற தங்கள் சக அலுவலர் அகால மரணமடைந்ததால் பொலிஸ் துறையினர் கவலைக்குள்ளாகியுள்ளார்கள்.

அந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் மரணம் தொடர்பில் விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.