பாதாள உலக குழுத் தலைவர் பெக்கோ சமன் மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்

37 0

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பெக்கோ சமன்’ என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷானியை, ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மித்தெனியவில் இடம்பெற்றதாக கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் சந்தேக நபர் எவ்வாறு தொடர்புடையவர் என்பது குறித்த ஆதாரங்களின் சுருக்கத்தை அடுத்த நீதிமன்றத் திகதியில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பெக்கோ சமன்’ என்பவரின் மனைவி மற்றும் குழந்தை, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.