இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிரான மனு திரும்பப் பெறப்பட்டது

45 0

உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கக் கோரியும், அந்த நியமனம் செல்லுபடியற்றது என தீர்ப்பளிக்கக் கோரியும் அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதியிடம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீதான மனு இன்று (23) உயர் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

உடவலவே சோம விஹாரையின் தலைமை பீடாதிபதி வேவெல்துவ ஞானபிரபா தேரர் மற்றும் சிலர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிமன்ற அமர்வின் முனனிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதன்படி, குறித்த மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், பின்னர் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.