இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவின் தந்தைக்காக இன்றைய (20) போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், இலங்கை அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் கையில் கறுப்புப் பட்டியை அணிந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
அபுதாபியில் நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துனித் வெல்லாலகேவின் தந்தை மரண செய்தியை அறிந்து உடனடியாக இலங்கைக்கு திரும்பினார்.
இந்நிலையில் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதன் பின்னர் துனித் வெல்லாலகே மீண்டும் நேற்று ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி புறப்பட்டு சென்று அணியுடன் இணைந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது

