மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!

67 0

லங்காதீப மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம, அநுராதபுரம் – பொல்பிதிகம பிரதேசத்தில் குழந்தை ஒன்று பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரித்து ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம உடல்நலக் குறைவு காரணமாக ஏற்கனவே சத்திரசிகிச்சை பெற்றவர் எனவும் ஆனாலும் தொடர்ந்து ஊடக கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் காரணமாக மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகமவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலின் போது மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகமவை காப்பற்றச் சென்ற அவரது மனைவியும் காயமடைந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில்  சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆனால் மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம தொடர்பில் கண்காணித்து சந்தேக நபருக்கு தகவல் வழங்கி குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைதுசெய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.