சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

42 0

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தீயணைப்புத் திணைக்களத்தின் 07 தீயணைப்பு வாகனங்கள் உட்பட பல தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்ததொட்டி ஒன்றில் நேற்று (10) இரவு தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

அதேநேரம், இன்று வியாழக்கிழமை (11) சம்பவ இடத்தில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.