ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்திய இரசாயனங்களுக்கான சோதனை அறிக்கை விரைவில்

37 0

நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய பொருட்களின் மாதிரிகளை சோதிக்கும் செயல்முறை இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  அதன் தலைவர் வைத்தியர்  இந்திக வன்னிநாயக்க தெரிவித்தார்.

சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பலின் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மித்தெனிய பகுதியில் உள்ள இடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (07) தங்காலை, நெடோல்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இதேபோன்ற இரசாயன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் நேற்று திங்கட்கிழமை (08) கந்தானை பகுதியிலும் இதேபோன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தேசிய அபாய மருந்துகள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் வைத்தியர்  இந்திக வன்னிநாயக்க, இந்தப் பொருட்களின் மாதிரிகள் ஏற்கனவே பெறப்பட்டதாகவும், சோதனை நடவடிக்கைகள் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.