மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து, சனிக்கிழமை (06) இந்த மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 5 கைக்குண்டுகள், T-56 துப்பாக்கிக்கான 17 தோட்டாக்கள், மேலும் பிற துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்கள் ஆகியவை, அப்பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தருகில் புதிதாக வெட்டப்பட்ட கானிலிருந்து மீட்கப்பட்டன.

