விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது!

47 0

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

சந்தேக நபரான வர்த்தகர் டுபாயில் இருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 23,600 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 118 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 35 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.