வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருகிறது

86 0

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்த நாளில் நடைபெற்ற போராட்டத்தின் போது வீதிகளை மறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய சுதந்திர முன்னணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் ஆறு கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, திங்கட்கிழமை (01) உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட ஐந்து பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ரே அல் ஹுசைனின் இலங்கை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2016 பிப்ரவரி 6,  அன்று தும்முல்ல மற்றும் பிற பகுதிகளில் ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக சாலைகளைத் தடுத்த போராட்டக்காரர்களுக்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிஸாரினால்   வழக்குத் தொடரப்பட்டது.