அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பயணிகள் பேருந்துகளில் பயணிப்பவர்கள் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், இது தொடர்பாக சலுகை காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விபத்துக்கு அமைவான முடிவை மீறும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஆசப்பட்டி அணிவது தொடர்பில் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன, இவ்வாறு தனது கருத்தை வௌியிட்டார்.
“ஆசனப்பட்டி அணிவது மிகவும் முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம்.
ஏனெனில் இது விபத்துகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் என்று எங்களிடம் தரவுகள் உள்ளன.
அதனால்தான் நாங்கள் இரண்டு மாதங்களாக விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இந்த கட்டத்தில், அனைத்து வாகனங்களின் சாரதிகளும் இலங்கை முழுவதும் பயணம் செய்தால் ஆசனப்பட்டி அணிய வேண்டும்.
மேலும், இலங்கை முழுவதும் வாகனத்தில் பயணம் செய்தால் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் ஆசனப்பட்டி அணிய வேண்டும்.

