அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பல இலட்சம் கோடி பாதிப்பு ஏற்படுமாம் – இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம்

52 0

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்திய ரூபா மதிப்பில் 4.2 இலட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்திய ஏற்றுமதியாளர்கள் வரி விதிப்பு குறித்து மேலும் கூறுகையில், ‘மருந்துகள், மின்னணு சாதனங்கள், பெட்ரோலியம் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு தொடரும். அதே நேரம், இறால், ஆயத்த ஆடைகள், தோல், இரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, அமெரிக்கச் சந்தைகளில் இருந்து இந்திய பொருட்கள் வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு சலுகையைப் பெற்ற இந்தியாவின் போட்டியாளர்களான பங்களாதேஷ், வியட்நாம், இலங்கை, கம்போடியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு வரவேற்பு பெருகும். இதனால், இந்தியா ரூபா 4.2 இலட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனர்.