டென்மார்கில் கரும்புலிகள் நினைவாக 32ஆவது ஆண்டாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

128 0

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 5ஆம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளுக்கென்று தனித்துவமான வீரவரலாறு உள்ளது. அவர்களின் ஒரேமூச்சு, சுதந்திரமான “தமிழீழ தேசம்”அதற்காக அவர்கள் வெடிகளைச் சுமந்து சென்று, தமது உயிரைக் தற்கொடையாகக் கொடுத்து வீரவரலாறு படைத்தார்கள். இவர்களின் தியாகத்தை நினைவில் சுமந்து கடந்த 32ஆண்டுகளாக டென்மார்க் தமிழீழ விளையாட்டு துறையினரால் நாடத்தப்படுகின்ற “கரும்புலி” கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்டப் சுற்றுப் போட்டி Grindsted நகரில் 23.08.2025 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக டென்மார்க் மற்றும் தமிழீழத் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. அதன்பின்னர் கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வுகளை தொடந்து , 32 ஆண்டுகளாக, கரும்புலிகள் நினைவு சுமந்து நடாத்தப்படும் இச் சுற்றுப் போட்டியின் முக்கியத்துவத்தையும் மற்றும் அவர்களின் ஈகத்தையும் விளையாட்டு வீரர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதை அடுத்து இச்சுற்றுப்போட்டியின் நடைமுறைகளை அணித் தலைவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதன் பின்பு போட்டிகள் ஆரம்பமாகின.

இப் போட்டியில் மேற்பிரிவில் ஆண்கள், 35+ஆண்கள் மற்றும் பென்கள் என மூன்று பிரிவுகளும், இளையோர் பிரிவு: 2009/08 , மற்றும் சிறுவர் பிரிவு: 2013/12 என மொத்தமாக ஐந்து பிரிவுகளுக்கு போட்டிகள் நடைபெற்றன.

இச் சுற்றுப் போட்டியில் பார்வையாளர்களின் உற்சாகத்துடன் விளையாட்டு வீரர்கள் மிகவும் ஆர்வத்துடனும் விறுவிறுப்புடனும் போட்டிகளில் பங்குபற்றியதை காணக்கூடியதாக இருந்தது.

மேற் பிரிவில் இறுதியாட்டத்தில் Dantam IF A அணியினரை எதிர்த்து போட்டியிட்ட Hobro Black அணியினர், 2-1 என்ற கோல் கணக்கில் 2025 க்கான வெற்றிக்கிண்ணத்தையும், தொடர்ந்து இராண்டாவது தடவையாக சுழல் கிண்ணத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன் இந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை சிறந்த முறையில் நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துக் கழகங்களுக்கும் மற்றும் உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, தேசியக் கொடிகள் இறக்கி வைக்கப்பட்டன. இறுதியாக” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எமது தாரக மந்திரத்துடன் இச் சுற்றுபோட்டி இனிதே நிறைவு பெற்றது.

5 பிரிவுகளாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் விபரங்கள்:

மேற்பிரிவு: ஆண்கள்

முதலாம் இடம்:

Hobro Black

இரண்டாம் இடம்:

Dantam IF A

மூன்றாம் இடம்:

OSK

 

சிறந்த விளையாட்டு வீரன்:

அபு Hobro Black

சிறந்த பந்துக் காப்பாளர்:

சுதன் கிருஸ்னராஜ் Hobro Black

 

மேற்பிரிவு: 35 + ஆண்கள்

முதலாம் இடம்

GTFC

இரண்டாம் இடம்

Aarhus SK

மூன்றாம் இடம்:

Dantam IF A

 

சிறந்த விளையாட்டு வீரன்:

ஜெயன் ஜெ GTFC

சிறந்த பந்துக் காப்பாளர்:

தினேஸ் Aarhus SK

 

மேற்பிரிவு: பென்கள்

முதலாம் இடம்:

FC THEEVU

இரண்டாம் இடம்:

GTFC

மூன்றாம் இடம்:

OTSC

சிறந்த விளையாட்டு வீராங்கனை:

மாயா FC THEEVU

சிறந்த பந்துக் காப்பாளர்:

சங்கீதா GTFC

பிரிவு 2009/08:

முதலாம் இடம்:

GTFC

இரண்டாம் இடம்:

Næstved Rangers

மூன்றாம் இடம்:

OTSC

சிறந்த விளையாட்டு வீரன்:

லூக்காஸ் GTFC

சிறந்த பந்துக் காப்பாளர்:

மெலியாஸ் GTFC

பிரிவு 2012/13:

முதலாம் இடம்:

Aarhus Sk

இரண்டாம் இடம்:

OTSC

மூன்றாம் இடம்:

Dantam IF

சிறந்த விளையாட்டு வீரன்:

ஆதிஸ் Aarhus SK

சிறந்த பந்துக் காப்பாளர்:

லக்‌ஷ்மன் Dantam IF