பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் மஹபாகே பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (25) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மஹபாகே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மஹபாகே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா – மினுவாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 180 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன், 12 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், மடிக்கணினி, 6 கைக்கடிகாரங்கள், 2 தங்க மாலைகள் மற்றும் தொலைக்காட்சிப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மஹபாகே பிரதேசத்தில் இடம்பெற்ற 7 திருட்டு சம்பவங்கள் மற்றும் கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற 4 திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹபாகே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

