மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.(காணொளி)

309 0

 

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 68 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் திருகோணமலையில் பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது, நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தியமை தொடர்பில் சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பாக இரவு பகலாக தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது நியாயமான போராட்டத்திற்கு இதுவரையில் உறுதியான பதில்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.